தஞ்சாவூரில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது

19

தஞ்சாவூர் நடுவண் மாவட்டம் சார்பாக ‘தமிழ்த்தேசிய இனமும், அது எதிர்கொள்ளும் சிக்கல்களும்’ எனும் தலைப்பில் தஞ்சாவூரில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில், தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சி சார்பாக மாநாட்டு நிதியும், பரப்புரை வாகனமும் வழங்கப்பட்டது.இதில் தஞ்சை மண்டலத்தளபதி சட்டத்தரணி நல்லதுரை தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் செ.குமார் முன்னிலை வகித்தார். இதில் தேர்தல் பரப்புரைக்காக ‘நாம் தமிழர் தேர்’ வாகனம் தஞ்சை மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமலேசியாவில் தமிழர் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது
அடுத்த செய்திதிருப்பூரில் மே நாள் பேரணி நடைபெற்றது