சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு

27

க.எண்: 2019120342
நாள்: 05.12.2019

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 07-12-2019 சனிக்கிழமை அன்று நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
07-12-2019
சனி
காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம்
(தாராபுரம், திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மற்றும் மடத்துக்குளம் தொகுதிகள் மட்டும்)
ஹோட்டல் புளு பெர்ரி,
பென்னி வளாக சபரி சாலை
(திருப்பூர் தெற்கு தொகுதி அலுவலகம் அருகில்)
மாலை 03 மணியளவில் கோவை மாவட்டம் (அனைத்து தொகுதிகள்) ஒர்க்க்ஷாப் ஒனர் அசோசியன் கட்டிடம், குனியமூத்தூர்.

 

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு)
அடுத்த செய்திஅண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு