சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு

32

க.எண்: 2019110232
நாள்: 19.11.2019

சுற்றறிக்கை:

மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு
(திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 21-11-2019 வியாழக்கிழமை அன்று நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
21-11-2019
வியாழன்
காலை 09 மணியளவில் திருவாரூர் மாவட்டம் யு.பி. மகால் (U.P. Mahal),
பனகல் சாலை,
பழைய பேருந்து நிலையம் அருகில்திருவாரூர்
பிற்பகல் 03 மணியளவில் நாகப்பட்டினம்
மாவட்டம்

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு