சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டக் கலந்தாய்வு

50

க.எண்: 2019110230
நாள்: 18.11.2019

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு

(திருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள்)

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். திருச்சி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 22-11-2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
22-11-2019
வெள்ளி
காலை 09 மணியளவில் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் எல்.ஆர்.ஆர் திருமண மண்டபம்.

அட்லஸ் மருத்துவமனை அருகில்.
சத்திரம் பேருந்து நிலையம் அருகில், திருச்சி.

பிற்பகல் 03 மணியளவில் கரூர் மாவட்டம் சுமதி ரத்தினம் மண்டபம்.
சுமதி பலகாரக்கடை மேல்தளம்,.
ஜவகர் பஜார், கரூர்.

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர்  கட்சி

முந்தைய செய்திமருத்துவ முகாம் – மரம் நடுதல் : திருத்துறைப்பூண்டி
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டக் கலந்தாய்வு