சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டக் கலந்தாய்வு

63

க.எண்: 2019110220
நாள்: 13.11.2019

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு
(கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள்)

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 15-11-2019 மற்றும் 16-11-2019 அன்று நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
15-11-2019
வெள்ளி
காலை 09 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் அப்பா மினி ஹால்,
பிஷப் இல்லம், ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி சாலை, நாகர்கோயில்
பிற்பகல் 03 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ராசி திருமண மண்டபம்,
எண் 38, வடக்கு ரத வீதி,
சிவன் கோயில் அருகில், தூத்துக்குடி – 2
16-11-2019
சனி
காலை 09 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம் என்.எஸ் மகால்,
80 அடி சாலை, ரஹ்மத் நகர்,
பாளையங்கோட்டை,
வருமான வரித்துறை அலுவலகம் அருகில்

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயார் மறைவு – புகழ் வணக்கம் செலுத்த சீமான் விரைகிறார்
அடுத்த செய்திசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவதற்கான காலநீட்டிப்பு