சுற்றறிக்கை: நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்! 

701

சுற்றறிக்கை: சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் குருதி கையிருப்பு தீர்ந்தது:

நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்!  | நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடை பாசறை

அன்பின் உறவுகளுக்கு.! வணக்கம்,

சென்னை, மத்திய தொடர்வண்டி நிலையம் அருகே அமைந்துள்ள இராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையில் குருதியின் கையிருப்பு முழுவதுமாகத் தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிவித்திருக்கிறது. இதனால், நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய குருதியின்றி மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையினைப் போக்க நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை தனது பங்களிப்பைச் செலுத்த விழைகிறது. எனவே, நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தர அணியமாவோம்!

ஆதலால், இன்றுமுதல் நாம் தமிழர் உறவுகள் இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று குருதிக்கொடை செய்யுமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்களும், தொகுதிப் பொறுப்பாளர்களும் இணைந்து இப்பெரும் பணியினை முன்னெடுக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:

திரு. அரிமா மு.பெ.செ.நாதன்76674 12345 /88254 13664

திரு. சுகுமார்98411 86128

திரு. தம்பி மணி81225 40511

மருத்துவமனை தொடர்புக்கு:

மருத்துவர் சுபாசு93817 15141

அரசு தலைமை மருத்துவர் குருதிப் பிரிவு

 

முந்தைய செய்திமே.18 இன எழுச்சி பொதுக்கூட்டம்-புகைப்படங்கள்|திருநெல்வேலி
அடுத்த செய்திசுற்றறிக்கை: வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை