கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துகுமார் அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை இன்னும் கைது செய்யாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வரும் தமிழக காவல்துறையை கண்டித்து 3-5-2011 அன்று புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக புதுகோட்டை அண்ணாசிலை அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.
இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.