காணி அதிகாரம் இல்லையேல் விளைவுகள் பாரதூரமாக அமையும்-கூட்டமைப்பு!

51

சிறீலங்காவின் மாகாண சபை­க­ளுக்கு காணி அதி­காரம் இல்லை என்று உயர் நீதி­மன்றம் அளித்­துள்ள தீர்ப்பு ஆச்­ச­ரி­யத்­தையும் ஏமாற்­றத்­தையும் அளிக்­கி­றது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி­யுள்­ளது.

வட மாகாண சபைக்­கான தேர்தல் நடை­பெற்று அங்கு ஜன­நா­யக முறை­யி­லான ஒரு தீர்வு வந்த சில நாட்­க­ளுக்குள் இப்­ப­டி­யான தீர்வு வந்­துள்­ளது என்று கூட் ­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுவின் தலை வர் இரா.சம்­பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபை உட்பட்ட நாட்டின் எந்த ஒரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது அரசாங்கத்தின் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல அரசாங்கத்தின் குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் இந்த கருத்திற்கு எதிர்கருத்தினை சம்மந்தன் தெரிவித்துள்ளார்

முந்தைய செய்திதேர்தலின் பின்னர் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
அடுத்த செய்திவிடுதலை எழுச்சி வீடியோ காட்சிகளை வைத்திருந்த இளைஞன் கைது!