நாம் தமிழர் கட்சி கலைப் பண்பாட்டு திருவிழா – செய்தியாளர் சந்திப்பு!!

25
நாம் தமிழர் கட்சி கலைப் பண்பாட்டுத் திருவிழா – மதுரையில் நாளை நடக்கவிருப்பதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில், செந்தமிழன் சீமான்,
நாம் தமிழர் கலைப் பண்பாட்டுப் பாசறை மாநிலத் தலைவர் புலவர் மு. தமிழ்க்கூத்தன், அதன் செயலாளர் இயக்குனர்  ஐந்துகோவிலான், நாம் தமிழர் கட்சி மண்டல அமைப்பாளர் வெற்றிக்குமரன் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் சிவானந்தம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது அழிந்த கலைகளை மீட்பதும் நலிந்த கலைஞர்களை காப்பதும் தமிழர்களாகிய நமது கடன் என்றும், நாளை நடக்கவிருப்பது ஒரு தொடக்கம் தான், இதன் வீச்சினை காலப்போக்கில் தமிழகம் உணரும் என்றும் மதுரை வாழ் தமிழ் சொந்தங்கள் அணைவரும் தங்கள் குடும்பத்துடன் வந்து அரிய தமிழ் கலை நிகழ்ச்சிகளை காண வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

 

                 

 
 
 
 
 
 
 
 
 
 
நன்றி..
இராசகுரு/ சுரேசுக்குமார்
செய்திப்பிரிவு,
நாம் தமிழர் கட்சி
மதுரை
முந்தைய செய்திமூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய உறுதியளித்தால் பிரணாப்புக்கு திமுக ஆதரவளிக்கலாம்: சீமான்
அடுத்த செய்திமதுரை – கலை இலக்கிய விழா ஒளிப்படம் 23-06-2012