ஒரே நாளில் பத்து இலட்சம் பனைவிதை விதைக்கும் பனைத் திருவிழா – சீமான் தொடங்கிவைத்தார்

20

செய்திக்குறிப்பு: ஒரே நாளில் பத்து இலட்சம் பனைவிதை விதைக்கும் பனைத் திருவிழா  | நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை

நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பல கோடி பனைத் திட்டங்களின் முன்மாதிரி முன்னெடுப்பாக தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கில் பனை விதைகளை விதைக்கும் பணிகளை நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதன் நீட்சியாக, தமிழகம் முழுவதும்  இன்று 08-09-2019 ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே நாளில் பத்து இலட்சம் பனைவிதைகளை நடவு செய்யும் நிகழ்வினை, பனைத்திருவிழாவாக சுற்றுச்சூழல் பாசறை கொண்டாடிவருகிறது.

இதனையொட்டி இன்று 08-09-2019 காலை 10 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட, கோவிலம்பாக்கம் ஊராட்சியிலுள்ள நாராயணபுரம் ஏரியில் பனைகளை விதைத்து இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
காணொளி:

 

முந்தைய செய்திஅம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயற்பட்டதால் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகனை கல்லூரியைவிட்டு நீக்கம் செய்வதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அரசர்க்கு அரசன் அருண்மொழிச்சோழன் பெருவிழாக் குழு