ஐ.நா போர்குற்ற அறிக்கை தொடர்பாக தமிழின விரோத போக்கை கடைப்பிடித்து வரும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.

151

தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையம் அருகில் 6 .5 .2011 வெள்ளிகிழமை அன்று மாலை 4 மணிக்கு ஐ .நா.சபை, இன வெறியன் ராசபக்சேவை போர் குற்றவாளி என்பதை உலகுக்கு அறிவிக்ககோரியும் அறிக்கை வந்து இத்தனை நாளாகியும் இந்தியா அமைதியாக இருந்து கொண்டு தமிழர்களின் உணர்வை அலட்சியப் படுத்திகொண்டு இருப்பதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில்

ஆ.நல்லதுரை மாநில ஒருங்கிணப்பாளர் ,

மணி.செந்தில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணப்பாளர் ,

சதா .முத்துகிருஷ்ணன் மாவட்டபொறுப்பாளர்,

பழ.சக்திவேல் வடக்கு மாவட்டபொறுப்பாளர்,

க.ராம்குமார் இளைஞர் பாசறை மாவட்டபொறுப்பாளர்,

தமிழின உணர்வாளர்களும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்ய உள்ளார்கள். எனவே நாம் தமிழர் கட்சியின் உறவுகள் அனைவரும் ”தாயகத்திற்காக உயிரைக் கொடுத்த நம் சொந்தங்களுகாக உணர்வைகொடுக்க” தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்திபோர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள்! – கொழும்பில் பிளேக் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினரின் ஐ.நா போர்க்குற்ற அறிக்கையை மத்திய அரசு ஆதரிக்க வேண்டி உண்ணாநிலை அறப்போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்.