ஈ.பி.டி.பியினர் தீவகத்தில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!

40

தீவகத்தில் ஈ.பி.டி.பியினர் தமது தேர்தல் தோல்வியை தாங்கமுடியாது மக்களுக்கு பொல்லுத் தடியால் அடித்துள்ளார்கள். நடந்து முடிந்த வடமாகாண தேர்தலில் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியை பெற்று இருக்கிறது. இதில் ஈ.பி.டி.பி படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பாக இவர்களது கோட்டை என்று மார்தட்டிக் கொண்டு திரிந்த தீவகத்தில் தோல்வி அடைந்தது குறித்து மன விரக்தியில் உள்ள ஈ.பி.டி,பி னர் புளியங்குடல், ஊர்காவற்றுறை, வேலணை, தம்பாட்டி, சாட்டி, நாரந்தனை, போன்ற பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னின்று உழைத்த பல பேருக்கு பொல்லுத்தடிகளால் தாக்கியுள்ளனர்.

இதனால் தீவக மக்கள் பெரும் அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர்களுக்குப் பயந்து யாழ் வாழும் தமது உறவுகளுக்கு அவசரத் தொலைபேசி அழைப்பு விடுத்து ஈ.பி.டி.பி யினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் மேலும் சிலர் ஊர்காவற்றுறை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து இருக்கிறார்கள், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தீவக மக்களை காக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. ஈ,பி டி.பி யினர் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என தீவக மக்கள் வலியுறுத்துகின்றனர்.

முந்தைய செய்தி3 ஆம் இணைப்பு வடக்கில் மலர்ந்தது தமிழர் ஆட்சி: கூட்டமைப்பு மாபெரும் வெற்றி!
அடுத்த செய்திவடக்கு தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள்.