ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!

20

ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும் !


போ
ன பாதி உசுர காக்க
கடலை பார்த்து போன எங்க –
மீதி உயிரை தின்ன நாயி –
தெரு தெருவா அலையுது; ரொம்ப திமிருலத் தான் திரியுது!!

பாவம் மேல பாவம் சேர்த்து
கடல் கடலா சுத்திவந்து
தமிழன்; தலைய பார்த்து சுட்டது
கேட்டா கடலில் – கோடு போட்டுக் காட்டுது!!

எம் சிறகொடிக்கப் பாக்குது
இனமருக்க பாக்குது –
நன்றிகெட்டோர் உறவால – எம்
கருவறுக்க துடிக்கிது!!

தமிழனென்றால் ஏத்தமா
திருப்பி யடிக்காத் – துச்சமா
மொத்த  தமிழர் எழுந்து நின்னா
சிங்களந் தான் தாங்குமா?

ஆறுகோடி தமிழனும்
நூறு  கோடி மனிதனும்
சேர்ந்து செய்த கொலையடா
மனிதமில்லா செயலுடா!

கர்ப்பினியை சுடுவதும்
மீனவனை கொள்வதும்
துயிலம் இடித்துத் தகர்த்ததும்
எவங் கொடுத்த தைரியம் ?
நாம் சும்மா இருந்த மடமைடா!

இரக்கம்  இல்லா பிறவிகள்
தமிழச்சி மானம் சிதைத்த கோழைகள்
மண்ணு மேல கொடிய நட்டு –

கடலை கூட கேட்குது தமிழனை வஞ்சகமா கொல்லுது!!

ஆடும் வரை ஆடட்டும்
அடிக்கும் வரை அடிக்கட்டும்
தமிழன் சேரும் வரை சிரிக்கட்டும்
ரத்தம் சுடும்வரை திமுறுடா;
தமிழனை உன் ஆணவத்தால் எழுப்புடா!!!

சிறகொடிச்ச பாவமும்
முலையறுத்த கோபமும்
ரத்தம் பாய விட்ட கொடுமை
அத்தனைக்கும் பதிலுடா; திருப்பியடிக்கும் வழியடா!!

ஆளுபவர் அழுவட்டும்
இருக்கை மீது உறங்கட்டும்
எழுந்து நிற்கும் இளைஞர் அணி  –
துணிந்து – மீனவனை காக்கட்டும்;  ஈழத்தை மீட்கட்டும்!!

வித்யாசாகர்

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] ஈகி முத்துகுமார் அவர்களின் இனவெளுச்சி சுடர் ஊர்தி கடலூர் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்கம்.
அடுத்த செய்திஇனியும் என்ன செய்ய போகிறோம் ! – பகலவன்