இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஆதரவு – பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம்.

32

ஐ.நா செயலாளர் நாயகம் அமைத்த போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளுக்கு பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக விதிகளின் மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிபுணர் குழுவின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்ததுபோல, அனைத்துலக சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு நாம் எமது ஆதரவுகளை வழங்குவோம்.

சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை கடந்த 2010 ஆம் ஆண்டு அமைத்துள்ளது. இந்த ஆணைக்குழுவின் பணியும், ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் முக்கியமானவை.
எனவே சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்துடன் காத்திரமான வழிகளில் இணைந்து செயற்பட வேண்டும். நாட்டில் இனநல்லிணக்கப்பாடு ஏற்பட முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இந்த இரண்டு வழிகளையும் சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி;ஈழம் நியுஸ்

முந்தைய செய்திஐ.நா அறிக்கையை முறியடிப்பதில் இந்தியாவின் ஆதரவு முக்கியமானது – ராஜபக்சே
அடுத்த செய்திஇறுதிக்கட்ட போரின் மேற்குலகின் பங்கு: விக்கி லீக்ஸ் அதிரடித்தகவல் !