இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்: தீவிர வாக்குச் சேகரிப்பில் சீமான்

45

நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் “மெழுகுவர்த்திகள்” சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 01-04-2017 (சனிக்கிழமை) காலை 7 மணியளவில், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் 38 வது வட்டத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டறிக்கைகளை கொடுத்து, செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திடெல்லியில் 17வது நாளாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திஇரா.கி நகர் இடைத்தேர்தல்: சீமான் தலைமையில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் – 38வது வட்டம்