ஆர்.கே நகர் தேர்தல்: 07-12-2017 ஏழாம் நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்

52

செய்தி: ஆர்.கே நகர் தேர்தல்: 06-12-2017 ஆறாம் நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது..

ஏழாம் நாளான இன்று 07-12-2017 (வியாழக்கிழமை) காலை 08:30 மணி முதல் நண்பகல் 12 மணிவரை வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெயசீலன் திருவொற்றியூர் கோகுல், ஆவடி நல்லதம்பி, ஆர்.கே நகர் கௌரிசங்கர், செய்திப்பிரிவு இணை செயலாளர் செந்தில்குமார், மாணவர் பாசறை கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் 38வது வட்டம், நேரு நகர், நேதாஜி நகர்
தொடர்வண்டி பாதை வாயில் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 02 மணி முதல் 5 மணிவரை 38வது வட்டம், வினோபா நகர், நெடுஞ்செழியன் நகர். IOC 3வது பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து மாலை 06 மணிக்கு தலைமையில் 39வது வட்டம், நாகூரான் தோட்டம் சந்திப்பு அருகில் தெருமுனைக்கூடம் நடைபெற்றது. இதில் கௌரிசங்கர், ஜெயசீலன், இடும்பாவனம் கார்த்திக், மாரிமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இறுதியாக வேட்பாளர் கலைக்கோட்டுதயம் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் ஆர்.கே நகரில் செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 08-12-2017 எட்டாம் நாள் பரப்புரைத் திட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் பரப்புரைத் திட்டம்