01/11/2020 ஞாயிற்றுகிழமை அன்று சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பில் நிகழ்த்தப்பட்ட தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தில் நம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெகதீசபாண்டியன் அவர்களின் தலைமையில் பெத்தநாயக்கன்பாளையம், பழனியாபுரி மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாட்டின் கொடியேந்தப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.