அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள்

24

அறிவிப்பு: *வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் நாள் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள்* | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

இரண்டாம்நாள் பரப்புரைக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பரப்புரைப் பயணத்திட்டம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு

29-07-2019 திங்கட்கிழமை மாலை 04 மணியளவில் *கீழ்வைத்தியனான் குப்பம் பேருந்து நிலையம்* அருகிலும்

இரவு 08 மணியளவில் *வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட காதர்பேட்டை சந்தைமேடு* அருகிலும் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் கீழ்வைத்தியனான் குப்பம் மற்றும் வாணியம்பாடி தொகுதி களப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், தத்தம் தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

முந்தைய செய்திதமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையான மொழியென 12ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்ப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திவேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அணைக்கட்டு மற்றும் வேலூரில் சீமான் பரப்புரை