அறிவிப்பு: பிப்.02, சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம்(காஞ்சிபுரம்)

166

 

க.எண்: 2020010009

நாள்: 22.01.2020

அறிவிப்பு: பிப்.02, சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம்(காஞ்சிபுரம்) | நாம் தமிழர் கட்சி

வருகின்ற 02-02-2020, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள எழில் சோலை இயற்கை வேளாண் பண்ணையில், நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையினருக்கான கலந்தாய்வு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

இடம்:

எழில் சோலை இயற்கை வேளாண் பண்ணை,
கைத்தண்டலம் கிராமம், வழையூர் அஞ்சல், சாலவாக்கம் வழி, உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் – 603107

இக்கலந்தாய்வில் சுற்றுச்சூழல் பாசறையின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்டம் மற்றும் தொகுதிச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டம் / தொகுதிக்குரிய சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர்கள் இக்கலந்தாய்வில் பங்கேற்பதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திநிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திசிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்