அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் – நன்னிலம் (27-08-2017)

845

அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் – நன்னிலம் (27-08-2017)

நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவிருக்கிறது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.

அதுசமயம், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளிர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி

இடம்: வடக்குத்தெரு, நன்னிலம், திருவாரூர் மாவட்டம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – கரியாப்பட்டினம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திசுற்றறிக்கை: தொகுதி உட்கட்சி கட்டமைப்பிற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்