அறிவிப்பு : தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றையப் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் ( 09-05-2019 சூலூர்)

100

அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றையப் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் ( 09-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

ஆறாம் நாளான இன்று 09-05-2019 வியாழக்கிழமை மாலை 05 மணியளவில் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் வெ.விஜயராகவன் அவர்களை ஆதரித்து சின்னியம்பாளையம், பள்ளி திடலில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் சித்தநாயக்கன் பாளையத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live

புதியதொரு தேசம் செய்வோம்!மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: http://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

குறிப்பு: இன்று 09-05-2019 வியாழக்கிழமை மாலை 05 மணியளவில் சோமனூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் சின்னியம்பாளையம், பள்ளி திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது

முந்தைய செய்திஅறிவிப்பு: சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் (சூலூர்)
அடுத்த செய்திஎழுவரின் விடுதலைக்கெதிரான வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக விடுதலைக்கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்