அறிவிப்பு: செங்கொடி நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – பொள்ளாச்சி (19-08-2017) | மகளிர் பாசறை

753

அறிவிப்பு: செங்கொடி நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – பொள்ளாச்சி (19-08-2017) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை

வீரத்தமிழச்சி செங்கொடி 6 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 19-08-2017 சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில் நடைபெறவுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுரையாற்றுகிறார்.

அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளீர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீரதமிழச்சி செங்கொடியின் ஈகத்தைப் போற்றுவோம்! ஏழு தமிழரின் விடுதலையை வென்று காட்டுவோம்!

நாள்: 19-08-2017, மாலை 5 மணி
இடம்: பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடல்.

தொடர்புக்கு: 9750002788 / 9788463628 / 9486866263


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி15-08-2017 மாநிலப் பொதுக்குழு கூட்டம் – தீர்மானங்கள் | புகைப்படங்கள்
அடுத்த செய்திதலைமை நிலையச் செயலாளர் மற்றும் அலுவலக நிர்வாகிகள் நியமனம்