அறிவிப்பு: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு: கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி
கூடங்குளத்தில் தொடர்ச்சியாக மேலும் பல புதிய அணு உலைகளை நிறுவி தமிழகத்தை முற்றாக ஒழிக்க துடிக்கும் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நாளை 27-10-2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் நடைபெறவிருக்கிறது.
இதில் சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றுகிறார். அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாள்: 27-10-2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி
இடம்: கூடங்குளம், திருநெல்வேலி மாவட்டம்
தொடர்புக்கு: +91-8344544344 / 9843478997 / 9988669489
வலைதளம்: https://goo.gl/ZDXEQb
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084