அறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 08-12-2017 எட்டாம் நாள் பரப்புரைத் திட்டம்

22

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 08-12-2017 எட்டாம் நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து ஏழு நாட்களாக நடைபெற்றுவருகிறது.

எட்டாம் நாளான இன்று 08-12-2017 (வெள்ளிக்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: காலை 09 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு
இடம்: 43வது வட்டம், காசிமா நகர், திருவள்ளுவர் நகர், பவர் குப்பம், சிங்கார வேலர் நகர், காசிபுரம் (A Block), ஒத்த வாடை, திடீர் நகர், பல்லவன் நகர்.
தொடங்குமிடம்: காசிமா நகர், தெரேசா பள்ளி எதிரில்.
தொடர்புக்கு: 8667624558 / 8072645211

நேரம்: மாலை 05 மணிக்கு மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: 38வது வட்டம், வைத்தியநாதன் மேம்பாலம் அருகில், தண்டையார்பேட்டை
தொடர்புக்கு: 9600079168 / 9841064107

தேர்தல் பரப்புரைப் பணிகளில் அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்று ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திசுற்றறிக்கை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: மாபெரும் பரப்புரை பொதுக்கூட்டம் – தண்டையார்பேட்டை
அடுத்த செய்திஆர்.கே நகர் தேர்தல்: 07-12-2017 ஏழாம் நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்