அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததார் என யாழில் உதயன் பத்திரிகை அச்சிட்டு இராணுவம் வினியோகம்!

44

கூட்டமைப்பின் சார்பில் யாழில் பேட்டியிடும் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக போலியான உதயன் பத்திரிகை அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமான தேர்தல் முறைகேடுகள் கண்டு யாழ் குடாநாட்டு மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். இன்று காலை அரசாங்கத்தினாலும் அவர்களின் படையினராலும் அச்சிடப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் முன்னளால் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் அனந்தி எழிலன் அரசாங்கத்துடன் இணைந்ததாக செய்தி வெளியிடப்பட்டு அனைவரது வீட்டு வாசலிலும் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு உள்ளது. எனினும் அநந்தி அரசாங்கத்துடன் தான் இணையவில்லை எனவும் இது அரசாங்கத்தினதும் அவர்களின் படையினரதும் திட்டமிட்ட போக்கிலித் தனம் எனவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திஇரா.சம்பந்தன் உள்ளிட் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வேட்பாளர் அனந்தியின் பாதுகாப்பு குறித்து கலந்தாராய்வு:
அடுத்த செய்திகனகராயன் குளத்தில் வாக்குச்சாவடியில் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்! – பதட்டத்தில் நடந்த தற்செயலான சம்பவம் என பொலிசார் தெிவிப்பு