நத்தம் தொகுதி – கலைவாணி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்பாட்டம்

30

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, வடமதுரை அருகே உள்ள குரும்ப பட்டி கிராமத்தின் வெங்கடேசு அவர்களின் 12 வயது மகள் கலைவாணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் செலுத்தி கொலை செய்த குற்றம் நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி குற்றவாளிகளை தண்டனையின்றி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது, அதனை கண்டித்தும், குற்றவாளிகள் தப்பிக்க தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்பினை கண்டித்தும், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்யக் கோரியும்,10.10. 2020 அன்று வடமதுரை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நத்தம் சட்டமன்றத் தொகுதியின் 50 கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்தினர்

 

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – கருக்கு பாலம் பிரதான சாலை சீரமைப்பு.
அடுத்த செய்திதிருமயம் தொகுதி – வேளாண்மை சட்டத் திருத்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம்