க.எண்: 2019110173
நாள்: 08.11.2019
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு
(வேலூர் மாவட்டம்)
நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். வேலூர் மாவட்டத்திற்கான கலந்தாய்வு வருகின்ற 09-11-2019 சனிக்கிழமை அன்று நடைபெறவிருக்கின்றது.
நாள் | நேரம் | கலந்தாய்வுக்கான தொகுதிகள் | கலந்தாய்வு நடைபெறும் இடம் |
09-11-2019 சனிக்கிழமை |
காலை 09 மணியளவில் | அரக்கோணம், சோளிங்கர், இராணிப்பேட்டை, காட்பாடி, வேலூர், ஆற்காடு | இலட்சுமி நரசிம்மா திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில், சோளிங்கர், |
பிற்பகல் 03 மணியளவில் | குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி,
கே.வி.குப்பம், அணைக்கட்டு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை |
திருமுருகன் திருமண மண்டபம், பொன்னேரி கூட்டுச்சாலைஜோலார்பேட்டை |
மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்