சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் கலந்தாய்வு

35

க.எண்: 2019110172
நாள்: 07.11.2019

சுற்றறிக்கை:

மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு
(காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு)

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான கலந்தாய்வுகள் வருகின்ற 18-11-2019 திங்கட்கிழமை அன்று நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
18-11-2019
திங்கள்
காலை 09 மணி ஆலந்தூர், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் என்.பி.ஆர் திருமண மண்டபம்
(NPR Marriage Hall),
ஜி.எஸ்.டி சாலை, கூடுவாஞ்சேரி,
பிற்பகல் 03 மணி உத்திரமேரூர், காஞ்சிபுரம், திருபெரும்புதூர்

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திபனை விதை நடும் திரு விழா-திருத்துறைப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்டக் கலந்தாய்வு