சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

37

க.எண்: 2020020046
நாள்: 27.02.2020

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

[ நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ]

கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கீழ்க்காணும் தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
07-03-2020

சனி

காலை 10 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பத்மநாபபுரம் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும்
குறிப்பு: அறிவிக்கபட்ட மற்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் மட்டும் பொதுக்குழுவில் வழங்கப்பட்ட தொகுதி நடவடிக்கை பதிவேட்டை கொண்டுவரவேண்டும்.
மாலை 03 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகள்
08-03-2020

ஞாயிறு

காலை 10 மணியளவில் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி, ஆலங்குளம், சங்கரங்கோவில் மற்றும் திருநெல்வேலி தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும்

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திதுண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் விழா- பூந்தமல்லி தொகுதி