சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் விருகம்பாக்கம், அண்ணாநகர், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, இராதாகிருஷ்ணன் நகர், இராயபுரம், திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி தொகுதிகளுக்கான கலந்தாய்வு

56

க.எண்: 2019110321
நாள்: 30.11.2019
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் விருகம்பாக்கம், அண்ணாநகர், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, இராதாகிருஷ்ணன் நகர், இராயபுரம், திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி தொகுதிகளுக்கான கலந்தாய்வு

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்குட்பட்ட விருகம்பாக்கம், அண்ணாநகர், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, இராதாகிருஷ்ணன் நகர், இராயபுரம், திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி தொகுதிகளுக்கான கலந்தாய்வு வருகின்ற 04-12-2019 (புதன்கிழமை) மற்றும் 05-12-2019 (வியாழக்கிழமை) நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
04-12-2019
புதன்
மாலை 04 மணியளவில் விருகம்பாக்கம், அண்ணாநகர், சேப்பாக்கம் மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதிகள் கட்சித் தலைமை அலுவலகம்,
இராவணன் குடில், எண். 8, செந்தில்நகர், சின்னபோரூர்,
சென்னை – 600116
05-12-2019

வியாழன்

மாலை 04 மணியளவில் இராதாகிருஷ்ணன் நகர், இராயபுரம், திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி மீனவ மக்கள் சமூக நலக்கூடம்,

எண். 34, குறுக்கு சாலை, புது வண்ணாரப்பேட்டை,

சென்னை – 600081

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா-இனிப்புகள் கொடுத்து கொண்டாட்டம்
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா-அன்னதானம் வழங்குதல்