ஊரடங்கு உத்தரவு உணவு வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்/திருப்பூர் வடக்கு

92

திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 8 தினங்களாக உணவின்றி தவிப்போர், சாலையோரத்தில் வசிப்போர் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்போர் என தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..
கடந்த நான்கு தினங்களாக  கிராமப்புற பகுதிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நமது கட்சி உறவுகள் இணைந்து கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1500 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டிருக்கிறது திருப்பூர் வடக்கு மாநகர் மாவட்ட தலைவர் கௌரி சங்கர் மற்றும் மாவட்ட செயலாளர் பழ.சிவகுமார் அவர்களுக்கும், ஒருங்கிணைந்து செயல்பட்டு கொண்டிருக்கும் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வராஜ் மற்றும் இணைச்செயலாளர் ஜெரால்ட் எட்வர்ட் சிங், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டு வழங்கினர்.

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதியில் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்குதல்-
அடுத்த செய்திதிரு.வி.க நகர் தொகுதியில் நிவாரண பொருள் வழங்கப்பட்டது.