அறிவிப்பு: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவள்ளூர் மாவட்டக் கலந்தாய்வு

57

சுற்றறிக்கை:

மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு
(திருவள்ளூர்)

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டக் கலந்தாய்வுக்கான நேர அட்டவணை பின்வருமாறு;

நாள் நேரம் கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
26-09-2019
வியாழன்
காலை 09 மணி கும்மிடிப்பூண்டி, மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர் நாரவாரிகுப்பம் சமூகநலக் கூடம், செங்குன்றம் பேருந்து நிலையம் பின்புறம்
பிற்பகல் 03 மணி திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர் ஜெயா கூட்ட அரங்கம் (Jaya Party Hall),
மொனசாமி மடம் தெரு
, ராக்கி மருத்துவமனை அருகில்

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திகீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பாராமல் தமிழக அரசே அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபுதிய கல்விக்கொள்கை மற்றும் இந்தி திணிப்பிற்கு எதிராக ஐ.நா. மன்றத்தில்