திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் மற்றும் பேரணி – திருப்பரங்குன்றம், மதுரை

57

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27-01-2016 அன்று மதுரை, திருப்பரங்குன்றத்தில் முப்பாட்டன் முருகனைப் போற்றும்விதமாக ‘திருமுருகப் பெருவிழா’ பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. முன்னதாக பேரணி திருப்பரங்குன்றம் கோயில் அருகேயுள்ள 16 கால் மண்டபம் அருகே தொடங்கி முப்பாட்டன் முருகன் கோயில்வரை நடைபெற்றது.  இதில் பறையிசை, தாரைத்தப்பட்டை முழங்க பச்சையுடை உடுத்தி ஒரு கையில் வேலையும், மறு கையில் தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தையும்  ஏந்திக்கொண்டு, ‘முருகன் என்றால் அரோகரா! தலைவன் என்றால் பிரபாகரா’, ‘வெற்றிவேல்! வீரவேல்’ என முழக்கங்கள் எழுப்பி ஆடிப்பாடியபடி  கோயில் சன்னதியை அடைந்தனர். இது காண்போரை உணர்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தியது.

பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. மதுரை கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை சார்பாக சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம்  உள்ளிட்ட தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் கூடியிருந்த மக்களை வியக்க வைத்தது. அதன்பிறகு, நடந்த ஐகோவின் ‘கருப்புக்குரல் நாடகம்’ எல்லோரையும் சாமியாட வைத்தது.

கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் தலைவராக இருந்த ஐயா தமிழ்க்கூத்தன் அவர்களுக்குப் புகழ்வணக்கம் செலுத்தி கூட்டம் தொடங்கியது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், குடந்தை தொகுதியின் வேட்பாளருமான மணிசெந்தில், மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதியின் வேட்பாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரம், மாநில கலைஇலக்கியப் பண்பாட்டுப்பாசறை  செயலாளர் எழுத்தாளர் வந்தியத்தேவன்,  மாநில வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த மதுரை சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். கூட்டத்தின் தீர்மானங்களை வீரத்தமிழர் முன்னணியின் மாநில செயலாளரான செந்தில்நாதன் சேகுவேரா வாசித்தார்.

இறுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பண்பாட்டு மீட்சியுரை நிகழ்த்தினார்.

[WRGF id=32652]

 

முந்தைய செய்திமொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் எண்ணூர் சீமான் வீரவணக்கவுரை காணொளி
அடுத்த செய்திமாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.