வருந்துகிறோம்: ரிசிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை நகரச் செயலாளர் ப. இளையராஜா மறைவு

46

வருந்துகிறோம்: ரிசிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை நகரச் செயலாளர் ப. இளையராஜா மறைவு | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்டம், ரிசிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை நகரச் செயலாளர் ப. இளையராஜா அவர்கள் 13-03-2018 புதன்கிழமை இரவு 12 மணியளவில் விபத்தில் சிக்குண்டு மரணமடைந்தார். ஈடுசெய்ய முடியாத இழப்பினாலும் தாங்கொணாப் பிரிவாளும் வாடும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது இறுதி ஊர்வலம் இன்று 15-03-2018 வியாழக்கிழமை மாலை 03 மணியளவில் மணலூர்பேட்டை இடுகாட்டில் நடைபெறுகிறது. அப்பகுதியிலுள்ள நாம் தமிழர் உறவுகள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து SDPI கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு