கல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்! – சீமான் எழுச்சியுரை

250

இந்திய அரசே! – காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய்! காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, திருச்சியிலுள்ள தமிழ்ப் பேரரசன் கரிகால் பெருவளச்சோழன் கட்டிய கல்லணையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ.மணியரசன் ஒருங்கிணைப்பில் ஏப்ரல் 27 அன்று காலை 10 மணியளவில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல் நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள மணிமண்டபம், அணைப் பூங்கா ஆகிய இடங்களில் உள்ள கரிகால் சோழன் சிலைகள், காவிரி அன்னை சிலை ஆகிவற்றுக்கு மாலை அணிவிக்கப்பட்டன.

இதில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் கலை, இலக்கிய, பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், கவுதமன், வீ.சேகர், யார் கண்ணன், பேரரசு, கீரா மற்றும் நடிகர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சியினர் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
https://www.youtube.com/watch?v=h_7P0_mmE9U

கூட்டத்தில் பேசிய சீமான், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபிறகும், இழுத்தடித்த மத்திய அரசு, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டது. இப்போது மத்திய அரசு கூடுதலாக 2 வார அவகாசம் கேட்டிருப்பது, கர்நாடகத்தில் தேர்தலை நடத்திமுடிப்பதற்காகதான். அதன்பிறகும் வாரியம் அமைக்குமா என்பதும் சந்தேகமே. மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்து ஏமாற்றுகிறது.

காவிரிக்காகப் போராடிய கடலூர் கடல்தீபன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காலம் மாறும், அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். அப்போது கடல்தீபனுக்கு இந்தக் காவல்துறையினர் பணியும் காலம்வரும். காவிரிக்காகப் போராடினோம் ஒன்றும் நடக்கவில்லை. நாம் தமிழராய் இணைந்த விக்னேஷ் தீக்குளித்துச் செத்தான் திரும்பி பார்க்கல. இப்போது பலர், சீமான் பேசிப் பேசி உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டார் என்கிறார்கள். தமிழர்கள் உணர்ச்சியற்று இருக்க வேண்டும் என நினைக்கிறது இந்த அரசு.

பசிக்காக ரொட்டித்துண்டை திருடிய மதுவை அடித்தே கொன்றார்கள். கேட்க நாதியில்லை. கோடி கோடியாய் கொள்ளையடித்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்றாரே நீராராவ் மோடி, அவருடன் முதல்வர் படம் எடுத்துள்ளார். அவர் கைது செய்யப்படுவாரா, கடல்தீபனை கைது செய்த காவல்துறையால், எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியல! அதிகாரம் மிக வலிமையானது.

தமிழனுக்கு கொஞ்சம் காலதாமதமாகத்தான் வலிக்கும். பட்டினிப் போராட்டம் நடத்தும் கட்சிக்காரர்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். இனி பட்டினிதான் கிடக்க வேண்டும். ஒரு குடம் தண்ணீர் ஐம்பது ரூபாய் தந்து வாங்குகிறோம். ஆனால் இனிவரும் காலங்களில் அந்தத் தண்ணீர் கூட இல்லை என்பார்கள். மனிதர்கள் நாம் பாட்டில் தண்ணீரைக்
வாங்கி குடிக்கலாம், மற்ற உயிரினங்கள் எங்குப் போகும்? தமிழகம் பாலைவனமாகிக் கொண்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் கேட்டுப் போராடுகிறோம். ஏனென்று கேட்க நாதியில்லை. ஆனால் தஞ்சாவூருக்கும், சேலத்துக்கும் விமானநிலையம் எதற்கு, விவசாய நிலங்களை அழித்து விமான நிலையங்கள் தேவையா? இதன் பின்னணியில் பன்னாட்டுச் சதி உள்ளது. இதற்காக 331லட்சம் கோடி ஏசியன் வங்கி கடன் கொடுத்துள்ளது. வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் இந்த ஒப்பந்தங்களை எடுக்கின்றன. இந்தத் தேசத்தின் கனிம வளத்தை ஏற்றுமதி செய்துவிட்டு, வெங்காயத்தையும் பருப்பையும் இறக்குமதி செய்வார்கள். அதுதான் இந்த நாட்டின் முன்னேற்றமா? பசுமை நாடாக விளங்கிய சோமாலிய நாடு இன்று பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது. அதைப்போல தமிழ்நாடு விரைவில் மாறும். நாம் பொழுதுபோக்குக்காக போராட வரவில்லை. ஐ.பி.எல் போட்டியைப் புறக்கணித்து போராடினால் காவிரி வந்திடுமா? என்கிறார்கள். இப்படி பேசுபவர்களால் தான் இவ்வளவு பிரச்சினையும். கர்நாடகத்தின் காவிரி தமிழர்களுக்கு இல்லையென்றால் தமிழர்களின் கனிம வளங்கள் எங்களுக்கே எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ரஜினி மிக நல்லவர் அதனால் முதல்வராக வேண்டும் என்கிறார்கள், அடுத்தவன் துயரத்துக்கு இரங்காதவன் எப்படி நல்லவன் ஆக முடியும். ரஜினியால், நெடுவாசல்,கதிராமங்கலம் குறித்துப் பேச முடியுமா? இமயமலைக்கு போனோமா, ஸ்வெட்டரை போட்டமான்னு இருக்கனும். இங்க இருந்து ட்விட்டர் போடக் கூடாது. தலைவன் என்பவன் கிரீடம் சுமப்பவன் இல்லை; தழும்புகளை சுமப்பவன். அந்த தலைமைப் பண்பு தங்களிடம் இல்லை. மோடி வந்தால் நல்லகாலம் பிறக்கும் எனப் பேசியவர்கள் இப்பொழுது. எங்கே ஓடி ஒளிந்து கொண்டார்கள். பி.ஜே.பி மட்டுமல்ல
பிற தேசியக் கட்சிகளும் தமிழர்களுக்கானது இல்லை. காவிரி விவகாரத்தில் ராகுல்காந்தி நிலைப்பாடு என்ன? ஒரு சொட்டு தண்ணீர் தமிழர்களுக்கு இல்லை என்றால், தேசியக் கட்சிகளுக்கு ஒரு ஓட்டுக்கூட இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். நாம் ஏந்த வேண்டியது, துவக்கை அல்ல வலிமைமிக்க நமது வாக்கை.

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பு அளிக்கவில்லை. பாரபட்சமாகவே நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. புதுவைக்கு ஒரு நியாயம்; தமிழகத்துக்கு ஒரு நியாயம் என சென்னை உயர்நீதிமன்றம் செயல்படுகிறது. சென்னை மெரினாவை திறந்துவிட்டால் தமிழர்கள் போராடுவார்களே என மத்திய அரசு அஞ்சுகிறது.

எல்லோரும் வீதிக்கு வந்து போராடும் நிலையில் அரசு நல்லாட்சி நடைபெறுவதாக கூறுகிறது; காஷ்மீர், நாகலாந்து போன்று தமிழகமும் ஆகப்போகிறது: இந்த ஆட்சியாளர்களுக்கு நாடும் மக்களும் எப்படிப் போனால்தான் என்ன, மீதி இருக்கும் காலத்தை எப்படி ஓட்டுவது என்பதுதான் இவர்களின் நோக்கம். காவிரிக்கான போராட்டம் வெகுமக்கள் போராட்டமாக மாறவேண்டும்” என முடித்தார்.

https://www.vikatan.com/news/tamilnadu/123520-seeman-asks-the-question-if-bottled-water-is-enough-for-us.html

முந்தைய செய்திகாவிரி உரிமை மீட்புக்காக ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் இருவர் விடுதலை
அடுத்த செய்திநாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் மாபெரும் கருத்தரங்கம் – தீர்மானங்கள்