ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரை: 05-12-2017 ஐந்தாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்

53

செய்தி: ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரை: 05-12-2017 ஐந்தாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி நேற்று 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது.

ஐந்தாம் நாளான இன்று 05-12-2017 (செவ்வாய்க்கிழமை) காலை 08 மணி முதல் 12 மணிவரை வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் 40வது வட்டம், குறுக்கு சாலை (கிராஸ் ரோடு) உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 02 மணி முதல் 5 மணிவரை 40வது வட்டம், அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு, செளந்தரபாண்டி சுப்பம்மாள் பெண்கள் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து மாலை 06 மணிக்கு அன்புத்தென்னரசன் தலைமையில் 41வது வட்டம், எழில் நகர், சுண்ணாம்பு கால்வாய் அருகில் நடைபெற்றது. இதில் ஈஸ்வரன், ஜெயசீலன், செந்தில்குமார், மாரிமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இறுதியாக வேட்பாளர் கலைக்கோட்டுதயம் அவர்கள் ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.

முந்தைய செய்திஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 06-12-2017 ஆறாம் நாள் பரப்புரைத் திட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 61ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு