அறிவிப்பு: மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – கிருஷ்ணகிரி | நாம் தமிழர் கட்சி

264

அறிவிப்பு: மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – கிருஷ்ணகிரி | நாம் தமிழர் கட்சி

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 27-11-2017 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு, கிருஷ்ணகிரி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேவராஜ் மகால் திடலில் (அரசுக் கலைக் கல்லூரி எதிரில்) நடைபெறவுள்ளது.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீரவணக்க உரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்: 27-11-2017 திங்கட்கிழமை
நேரம்: மாலை 5 மணி
இடம்: தேவராஜ் மகால், சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி. (அரசுக் கலைக் கல்லூரி எதிரில்)
தொடர்புக்கு: +91-8883042777


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசிய காவலர் மாயழகு மீது நடவடிக்கை எடுப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: வ.உ.சிதம்பரனார் 81ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு – துறைமுகம்