அறிவிப்பு: காவிரி உரிமை மீட்புப் போராட்டம்: பொய் வழக்குகளில் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு

58

அறிவிப்பு: காவிரி உரிமை மீட்புப் போராட்டம்: பொய் வழக்குகளில் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராகக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் அறவழி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10 அன்று சென்னை, அண்ணா சாலையில் ஐபில் கிரிக்கெட் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பொய்யாகப் புனையப்பட்டுச் சிறைபடுத்தும் போக்கு நடைபெற்றுவருகின்றது. கடந்த 4 நாட்களில் தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்னறிவிப்பின்றிப் பொய் வழக்குகளில் கைது செய்து சிறைப்படுத்தப்பட்டுவருகின்றனர்.

இது தொடர்பாக இன்று 14-04-2018 (சனிக்கிழமை) மாலை 04 மணியளவில் சேப்பாக்கத்திலுள்ள ‘சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்’ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஊடகவியலாளர்களை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
தங்கள் ஊடகத்தின் சார்பாக ஊடகவியலார்களை அனுப்பிச் செய்தி சேகரித்து வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: சென்னை விமான நிலையம் முற்றுகை – காவிரி உரிமை மீட்புக் குழு
அடுத்த செய்திகாவிரி உரிமை மீட்புப் போராட்டம்: பொய் வழக்குகளில் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியினர் கைது – வழக்கறிஞர் பாசறை கலந்தாய்வு