கட்சி செய்திகள் : 17-07-2017 பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி
பெருந்தலைவர் காமராசர் 115 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி அவரது நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்திய புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நேற்று 17-07-2017 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை அண்ணாநகர் (மேற்கு விரிவாக்கம்) டி.வி.எஸ் நகரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
17-07-2017 காமராசர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | அண்ணாநகர் | Seeman Speech Annanagar
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அ.வியனரசு, அன்புத்தென்னரசன், கலைக்கோட்டுதயம், ஆன்றோர் அவையம் புலவர் மறத்தமிழ்வேந்தன், விருகை கதிர்.இராஜேந்திரன், அன்வர் பேக் மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
[WRGF id=47614]