காவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் பிணையில் விடுதலை

27

கட்சி செய்திகள்: காவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் பிணையில் விடுதலை | நாம் தமிழர் கட்சி

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராகக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் அறவழி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10 அன்று சென்னை, அண்ணா சாலையில் ஐபில் கிரிக்கெட் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பொய்யாகப் புனையப்பட்டுச் சிறைபடுத்தும் போக்கு நடைபெற்றுவருகின்றது. கடந்த 4 நாட்களில் தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்னறிவிப்பின்றிப் பொய் வழக்குகளில் கைது செய்து சிறைப்படுத்தப்பட்டுவருகின்றனர். அவர்களை விடுதலை செய்வதற்கு வழக்கறிஞர் பாசறை தொடர்ச்சியாக இயங்கி வருகிறது.

கைதானவர்கள் பட்டியல்:
நாள்: 12-04-2018
1. பிரபாகரன்
2. ஐயனார்
3. பொன்னுவேல்
4. மகேந்திரன்
5. ராஜ்குமார்
6. பிரகாஷ்
7. வாகைவேந்தன்
8. சுகுமார்
9. ஆல்பர்ட்
10. ஏகாம்பரம்
11. மார்டின்
12. ராஜேஷ்
13. பிரதிப்
14. ஜெரால்ட்
15. தனசேகர்
16. நந்தகுமார்
17. கார்த்திக்
18. சரத்குமார்
19. மணிகண்டன்
20. சிவா
21. சரவணக்குமார்

நாள்: 13-04-2018
1. அன்புதென்னரசன்
2. எஸ்.கே சிவக்குமார்
3. விக்னேஷ்
4. ராஜாராமகிருஷ்ணன்
5. கணேசன்
6. ராம்ராஜ்
7. சிவக்குமார்
8. ஞானசேகரன்
9. சத்தியமூர்த்தி
10. கோகுலகிருஷ்ணன்
11. ஜீவா
12. சீமான் சுரேஷ்
13. ராயப்பன்
14. மன்சூர்அலிகான்
15. வீரபாண்டியன்
16. சரவணன்
17. ரூபன்
18. ஆகாஷ்
19. பாபுராசன்
20. ரங்கசாமி
21. சீனிவாசன்
22. அருண்கண்ணன்
23. முரளி
24. பொன்குமார்

நாள்: 14/04/2018
1. ஸ்டாலின்

விடுதலையானவர்கள் பட்டியல்:
1. கோகுலகிருஷ்ணன்
2. ஜீவா
3. சீமான் சுரேஷ்

பிணை கிடைத்தவர்கள் பட்டியல்:
1. மார்டின்
2. ராஜேஷ்
3. பிரதிப்
4. ஜெரால்ட்
5. தனசேகர்
6. நந்தகுமார்
7. கார்த்திக்
8. சரத்குமார்
9. மணிகண்டன்
10. சிவா
11. சரவணக்குமார்

.

முந்தைய செய்திகாவல்துறையினரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை! – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு
அடுத்த செய்திகாவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்