அறிவிப்பு: 14-05-2017 செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் | இராதாகிருஷ்ணன் நகர்

30
அறிவிப்பு: 14-05-2017 செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் | நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர்
===================================
எதிர்வரவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் செயல்பாடுகள் குறித்துக் கலந்தாலோசிக்கச் சென்னையிலுள்ள இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில், வருகின்ற 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மீனவ மக்கள் சமூகநலக்கூடம், குறுக்குச் சாலை (கிராஸ் ரோடு) , புதுவண்ணாரப்பேட்டையில் நடைபெறவுள்ளது.
 
இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகள், அனைத்து பாசறை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
முந்தைய செய்திஅறிவிப்பு: மே18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – பாம்பன் ( இராமேசுவரம் )
அடுத்த செய்திசெயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் | இராதாகிருஷ்ணன் நகர்