அறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 61ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு

129

அறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 61ஆம் ஆண்டு நினைவுநாள்: மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் சாதி, மத வேறுபாடற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என அனைவரும் உறுதியேற்க சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்!
உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு!
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்று விசமாகட்டும்!
ஆயிரமாண்டுகள் நாம் அடிமையாக வாழ்வதைவிட, ஒரு நொடியேனும் வீரமாகச் சுதந்திரமாக வாழ்ந்து சாவது மேலானது!
அறிவைத் தேடி ஓடுங்கள்! நாளைய வரலாறு உங்கள் நிழலைத் தேடி ஓடிவரும்!
இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும்!
கோயில்களில் எப்போதும் ஆடுகளைத்தான் பலியிடுகிறார்களே ஒழிய; சிங்கங்களை அல்ல!
மதிப்புமிக்க நம் உரிமைகளைச் சில ரொட்டித்துண்டுகளுக்காக விற்பது அவமானகரமானது!
கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர்!
அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய நினைவுநாள் இன்று (06-12-2017).
அந்த மகத்தான மாமேதையின் நினைவைப் போற்றுகிற இந்நாளில் எந்த உயர்ந்த நோக்கத்திற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடாற்றினாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றி சாதி, மத வேறுபாடற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என்ற உறுதியை ஏற்போம்!

சாதி ஒழிப்பு! சமூக நீதி!

இந்தக் கணத்தில் அண்ணல் அம்பேத்கரின் வழியில் நின்று அயராது அரும்பாடாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!

அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நம் புரட்சிகரமான புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நாம் தமிழர்!

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலர்வணக்க நிகழ்வு:

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைப்பெற்றுவருகிறது.

ஆறாம் நாள் பரப்புரையைத் தொடங்குவதற்கு முன்னர், அண்ணல் அம்பேத்கர் 61ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 06-12-2017 காலை 9 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்காலை சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கினைப்பாளர்கள் கலைக்கோட்டுதயம் மற்றும் அன்புத்தென்னரசன், ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர் கௌரி சங்கர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மலர்வணக்கம் செய்கிறார்கள்.

நாள்: 06-12-2017 (புதன்கிழமை)
நேரம்: காலை 9 மணிக்கு
இடம்: அண்ணல் அம்பேத்கர் சிலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சுங்கச் சாவடி அருகில், தண்டையார்பேட்டை

முந்தைய செய்திஆர்.கே நகர் தேர்தல் பரப்புரை: 05-12-2017 ஐந்தாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 07-12-2017 ஏழாம் நாள் பரப்புரைத் திட்டம்